ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Saturday 22 November 2014

Saneeswarar Pravesam

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், 
திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.

சனிப்பிரவேசம்!  

  
நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் ஒன்றாம் நாளான 16-12-2014 அன்று மதியம் 2.43 மணிக்கு, அருள்மிகு சனீஸ்வர பகவான் துலாம் இராசியிலிருந்து விருச்சிக இராசிக்கு பிரவேசிக்க இருப்பதை முன்னிட்டு , திருக்கூந்தலூர் முருகன் கோவிலில் சனீஸ்வர  பகவானுக்கு சிறப்பு ஹோமம் மற்றும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

1600 ஆண்டு பழம்பெருமை வாய்ந்த கூந்தலூர் முருகன் திருத்தலம் , சர்வ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. அதிசிறப்பாக ,திருக்கோவிலின் ஈசான்ய பாகத்தில் அருள்பாலிக்கும்  திருமுருகப் பெருமானை வணங்கி நிற்கும் சாந்த ரூபியாக , அருள் தரும் வள்ளல் பெருமானாக சனீஸ்வர பகவான் திகழ்வதால், சர்வ சனீஸ்வர பாதிப்புகள் நீங்கி சனீஸ்வர பகவானின் கருணையை, அன்பை அடையும் மிகச்சிறப்புக்குரிய பரிகாரத்தலமாக அடியார்களால் போற்றப்படுகிறது

மேலும், அங்காரக [ செவ்வாய் ] கிரகத்தின் ஆட்சி வீடான விருச்சிக இராசிக்கு இந்த சனி பகவான் பிரவேசம், செவ்வாய் - சனி பரிவர்த்தனை என்ற ஜாதக ரீதியான அமைப்பில் நிகழ்வதால்,அருணகிரிநாதரால் குமரகுருபரன் என வழங்கப்படும் கூந்தலூர் திருமுருகன் திருவருளால், இயல்பிலே செவ்வாய் - சனி பரிவர்த்தனை நிவாரண ஸ்தலமாகத் திகழும் கூந்தலூர் அருள்மிகு முருகன் திருக்கோவிலுக்கு அன்பர்கள் வந்திருந்து, 

சனிப்பிரவேச சிறப்பு ஹோமத்திலும் , பரிஹார அபிஷேக அர்ச்சனை ஆராதனைகளிலும் பங்கேற்று , அவர்தம் குடும்ப சுபிட்ஷம், தேக ஆரோக்கியம், மன அமைதி , பொருளாதார உயர்வுநிலைபெற நற்பலன் பெற்று , கிரக பாதிப்புகள் நீங்கி நிவாரணமடைந்து நல்வாழ்வு பெற்றிட, 

 எல்லாம் வல்ல கருணைக்கடலாம் அடியார் பிணி நீக்கும் 
அருள்மிகு கூந்தலூர் திருமுருகக்கடவுள் 
தாள்பணிந்து வணங்குகிறோம்!

ஓம் சரவண பவ!


க.ஆசைத்தம்பி  -  தக்கார்/செயல் அலுவலர் -  94435 12146

 தே.திருநாவுக்கரசு -  செயல் அலுவலர் -  95856 67502

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், 
திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.
மொபைல்: 96886 77538 / 94435 24737

Tuesday 18 November 2014

கூந்தலூர்

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், 
திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.

நேரில் வருவோர்

முன் பதிவிற்கும் , 
பரிகார ஹோமத்திற்கும் 

தொடர்பு கொள்ள;

 மொபைல் எண்: 96886 77538 / 94435 24737

http://koonthalurmurugantemple.blogspot.in

அனைவரும் வருக! சிவனருள் பெறுக!! 

Sunday 16 November 2014

கார்த்திகை முதல் சோம வார சங்காபிஷேகம்!

17-11-2014

இன்று 

கார்த்திகை முதல் சோம வார சங்காபிஷேகம்!

 கார்த்திகை மாத முதல் நாள், சோம வாரத்தில், திங்கட்கிழமையில்  பிறக்கிறது.

சிவாலயங்களில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் உலகாளும் ஈசனுக்கு , சிவபெருமானுக்கு விஷேசமாக 108,1008 எண்ணிக்கைகளிலான  வெண் சங்குகளால் , சங்காபிஷேகம் சிறப்புற நடைபெறும்.

சிவனடியார்  மனமுருக சிவபெருமானை பூசித்து வணங்கும் நன்னாளாம் இன்று , கார்த்திகை மாத முதல் சோமவார சங்காபிஷகம் , திருக்கூந்தலூர் அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரருக்கு மாலை 4.30 மணியளவில் சிறப்புற நடைபெறும்.

அடியார்கள் வருக! சிவபெருமான் பேரருள் பெறுக!


Koonthalur Murugan


Sunday 9 November 2014

முருகன் கோவில், கூந்தலூர்.




இயற்கை எழில் சூழலில் 
அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், முருகன் கோவில், கூந்தலூர்.

       நவக்ரஹ தரிசனம் செல்ல எண்ணம் கொண்ட அடியார்கள்,அன்பர்கள் கும்பகோணத்திலிருந்து திருக்கூந்தலூர் வழித்தடம் வழியே பயணத்திட்டம் வகுத்துக்கொண்டால்,குடந்தை நகரைச்சுற்றியுள்ள திருக்கோவில்களில் தரிசனம் முடித்துவிட்டு திருக்கூந்தலூரில் இரவு தங்கிவிட்டு மறுநாள் , திருநள்ளார் சநீச்வர பகவான் திருக்கோவில் செல்லும் வழியில் உள்ள கூத்தனூர் சரஸ்வதி அம்மனை தரிசித்து வணங்கிவிட்டு, மயிலாடுதுறை வழியே பிற கிரக தலங்களையும் வழிபட்டு கும்பகோணத்திலிருந்து இரயில் அல்லது வாகனம் மூலம் சொந்த ஊர் திரும்பலாம்.

   கூந்தலூரில் தங்கும் போது தங்குமிடம்,உணவு செலவு வெகுவாக குறையும் மேலும், நதிக்கரை ஒர சிற்றூரில் மாசுபடாத இயற்கைச் சூழல், மன அமைதி எல்லாவற்றுக்கும் மேலாக சனீச்வர பகவானின் அருளை நமக்கு கிடைக்கச்செய்யும் எம்பெருமான் கூந்தலூர் முருகனின் அற்புத தரிசனம் ஆத்ம நிறைவுடன் பெறலாம்.

  அருள்மிகு ஆனந்தவல்லி உடனாய ஜம்புகாரணேசுவரர் திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு அடியார்க்கெல்லாம் அருள் பாலித்துவரும் எம்பெருமான் கூந்தலூர் முருகனை தரிசித்து, இறையனுபவம் பெற வாரீர்!

எமது திருக்கோவில் இணையதளங்கள் 


நேரில் வருவோர்

முன் பதிவிற்கும் , 

பரிகார ஹோமத்திற்கும் 

தொடர்பு கொள்ள;

 மொபைல் எண்: 96886 77538 / 9443524737

தங்களை  கூந்தலூர் முருகன் ஆலயத்திற்கு, அன்புடன் அழைக்கிறோம்!!
குமரகுருபரன் அருள் பெற்றுய்ய குடும்பத்துடன் வாருங்கள்! 


ஓம் சரவணபவ! 

Thursday 6 November 2014

அன்னாபிஷேகம்


                                                            அன்னாபிஷேகம்:        
                                                                      06-11-2014.



 சிவாலயங்களில்,சிவபெருமானுக்கு ஆண்டு முழுவதும் எப்போதும்  இளநீர்,தேன்,பால், தயிர்,  பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் , நடந்தாலும்,ஆண்டுக்கு ஒருமுறை , ஐப்பசி பவுர்ணமி நன்னாளில் மட்டுமே , அன்னாபிஷேகம் நடைபெறும்.

அன்ன அலங்காரத்தில் சிவபெருமானை வழிபட, கோடி சிவ தரிசனம் பெற்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம். மேலும் வழிபாட்டின் பலன்கள் எல்லா உயிரினங்களுக்கும் கிடைக்கச்செய்யவே, அன்னப்பிரசாதத்தை  கோவில் திருக்குளங்களிலும், ஆறுகளிலும் கரைப்பர்.

 இத்தகைய விசேஷ திருநாளாம் ஐப்பசி பவுர்ணமி நன்னாளில்  இன்று மாலை ,கூந்தலூர் அருள்மிகு  ஆனந்தவல்லி உடனாய  ஜம்புகாரணேசுவரர்  திருக்கோவிலில்  , அருள்மிகு ஜம்புகாரணேசுவரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.

அன்பர்கள் கலந்துகொண்டு, சிவனருள் பெறுக!

Monday 3 November 2014

கூந்தலூர் முருகன்





அருள்மிகு  ஆனந்தவல்லி உடனாய  ஜம்புகாரணேசுவரர்  திருக்கோவிலில்     தனி  சன்னதி கொண்டு  அடியார்க்கெல்லாம்  அருள்   பாலித்துவரும்   எம்பெருமான்  கூந்தலூர் முருகனை தரிசித்து , இறையனுபவம் பெற வாரீர்!

நதிக்கரை ஒர சிற்றூரில் மாசுபடாத இயற்கைச்  சூழல், மன அமைதி எல்லாவற்றுக்கும் மேலாக சனீச்வர பகவானின் அருளை நமக்கு கிடைக்கச்செய்யும் எம்பெருமான் கூந்தலூர் முருகனின் அற்புத தரிசனம் ஆத்ம நிறைவுடன் பெற வாரீர்! ஓம் சரவணபவ! 


இணையதளம்: